Read Surah Al-Qalam (القلم) in Tamil — chapter 68 of the Quran, all 52 verses in Arabic with Tamil translation by Jan Trust Foundation, verse by verse. Revealed in Makkah, with free MP3 recitation from 12 reciters.

Type a number from 1 to 52 to jump straight there.

  1. بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

    68:1

    نٓ ۚ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ 1

    நூன், எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  2. 68:2

    مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ 2

    உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  3. 68:3

    وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ 3

    இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  4. 68:4

    وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ 4

    மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  5. 68:5

    فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ 5

    எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  6. 68:6

    بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ 6

    உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  7. 68:7

    إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ 7

    உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  8. 68:8

    فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَ 8

    எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  9. 68:9

    وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ 9

    (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  10. 68:10

    وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ 10

    அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  11. 68:11

    هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِيمٍ 11

    (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  12. 68:12

    مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ 12

    (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன், வரம்பு மீறிய பெரும் பாவி.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  13. 68:13

    عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ 13

    கடின சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  14. 68:14

    أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ 14

    பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால்

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  15. 68:15

    إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ 15

    நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், "இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவன் கூறுகின்றான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  16. 68:16

    سَنَسِمُهُۥ عَلَى ٱلْخُرْطُومِ 16

    விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  17. 68:17

    إِنَّا بَلَوْنَـٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَـٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ 17

    நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்; டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  18. 68:18

    وَلَا يَسْتَثْنُونَ 18

    அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை,

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  19. 68:19

    فَطَافَ عَلَيْهَا طَآئِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَ 19

    எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  20. 68:20

    فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ 20

    (நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  21. 68:21

    فَتَنَادَوْا۟ مُصْبِحِينَ 21

    (இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  22. 68:22

    أَنِ ٱغْدُوا۟ عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَـٰرِمِينَ 22

    "நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்" (என்று கூறிக் கொண்டனர்).

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  23. 68:23

    فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَـٰفَتُونَ 23

    எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்,

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  24. 68:24

    أَن لَّا يَدْخُلَنَّهَا ٱلْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌ 24

    "எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது" (என்று).

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  25. 68:25

    وَغَدَوْا۟ عَلَىٰ حَرْدٍ قَـٰدِرِينَ 25

    உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  26. 68:26

    فَلَمَّا رَأَوْهَا قَالُوٓا۟ إِنَّا لَضَآلُّونَ 26

    ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: "நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்" என்று கூறினார்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  27. 68:27

    بَلْ نَحْنُ مَحْرُومُونَ 27

    (பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) "இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்" (என்றும் கூறிக்கொண்டனர்.)

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  28. 68:28

    قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ 28

    அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் "நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?" என்று கூறினார்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  29. 68:29

    قَالُوا۟ سُبْحَـٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَـٰلِمِينَ 29

    "எங்கள் இறைவன் தூயவன், நாம் தாம் நிச்சமயாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்" என்றும் கூறினர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  30. 68:30

    فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَـٰوَمُونَ 30

    பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோகினர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  31. 68:31

    قَالُوا۟ يَـٰوَيْلَنَآ إِنَّا كُنَّا طَـٰغِينَ 31

    அவர்கள் கூறினார்கள்: "எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  32. 68:32

    عَسَىٰ رَبُّنَآ أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ 32

    "எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்" (எனக் கூறினர்).

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  33. 68:33

    كَذَٰلِكَ ٱلْعَذَابُ ۖ وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ 33

    இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது, அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  34. 68:34

    إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّـٰتِ ٱلنَّعِيمِ 34

    நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  35. 68:35

    أَفَنَجْعَلُ ٱلْمُسْلِمِينَ كَٱلْمُجْرِمِينَ 35

    நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  36. 68:36

    مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ 36

    (சத்தியத்தை நிராகரிப்போரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  37. 68:37

    أَمْ لَكُمْ كِتَـٰبٌ فِيهِ تَدْرُسُونَ 37

    அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  38. 68:38

    إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ 38

    நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா,

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  39. 68:39

    أَمْ لَكُمْ أَيْمَـٰنٌ عَلَيْنَا بَـٰلِغَةٌ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ ۙ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ 39

    அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  40. 68:40

    سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ 40

    (அவ்வாறெனில்) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே!) நீர் அவர்களிடம் கேட்பீராக.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  41. 68:41

    أَمْ لَهُمْ شُرَكَآءُ فَلْيَأْتُوا۟ بِشُرَكَآئِهِمْ إِن كَانُوا۟ صَـٰدِقِينَ 41

    அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  42. 68:42

    يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ 42

    கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  43. 68:43

    خَـٰشِعَةً أَبْصَـٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۖ وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَـٰلِمُونَ 43

    அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும்நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  44. 68:44

    فَذَرْنِى وَمَن يُكَذِّبُ بِهَـٰذَا ٱلْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ 44

    எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  45. 68:45

    وَأُمْلِى لَهُمْ ۚ إِنَّ كَيْدِى مَتِينٌ 45

    அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன், நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  46. 68:46

    أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ 46

    நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  47. 68:47

    أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ 47

    அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  48. 68:48

    فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌ 48

    ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக, மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம், அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  49. 68:49

    لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلْعَرَآءِ وَهُوَ مَذْمُومٌ 49

    அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  50. 68:50

    فَٱجْتَبَـٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّـٰلِحِينَ 50

    ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  51. 68:51

    وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَيُزْلِقُونَكَ بِأَبْصَـٰرِهِمْ لَمَّا سَمِعُوا۟ ٱلذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجْنُونٌ 51

    மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; "நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்" என்றும் கூறுகின்றனர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  52. 68:52

    وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ 52

    ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசயேன்றி வேறில்லை.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

You may also like

Surahs often read alongside this one.

Android app coming soon to Google Play — download it now.

Get the APK