Read Surah Al-Haqqah (الحاقة) in Tamil — chapter 69 of the Quran, all 52 verses in Arabic with Tamil translation by Jan Trust Foundation, verse by verse. Revealed in Makkah, with free MP3 recitation from 12 reciters.

Type a number from 1 to 52 to jump straight there.

  1. بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

    69:1

    ٱلْحَآقَّةُ 1

    நிச்சயமானது.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  2. 69:2

    مَا ٱلْحَآقَّةُ 2

    நிச்சயமானது எது?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  3. 69:3

    وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ 3

    அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  4. 69:4

    كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ 4

    ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  5. 69:5

    فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ 5

    எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  6. 69:6

    وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ 6

    இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  7. 69:7

    سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَـٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ 7

    அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  8. 69:8

    فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ 8

    ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  9. 69:9

    وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَـٰتُ بِٱلْخَاطِئَةِ 9

    அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  10. 69:10

    فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً 10

    அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  11. 69:11

    إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَـٰكُمْ فِى ٱلْجَارِيَةِ 11

    தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  12. 69:12

    لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ 12

    அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  13. 69:13

    فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ 13

    எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  14. 69:14

    وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً 14

    இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  15. 69:15

    فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ 15

    அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  16. 69:16

    وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ 16

    வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  17. 69:17

    وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَـٰنِيَةٌ 17

    இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  18. 69:18

    يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ 18

    (மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  19. 69:19

    فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَـٰبِيَهْ 19

    ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  20. 69:20

    إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَـٰقٍ حِسَابِيَهْ 20

    "நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்."

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  21. 69:21

    فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ 21

    ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  22. 69:22

    فِى جَنَّةٍ عَالِيَةٍ 22

    உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  23. 69:23

    قُطُوفُهَا دَانِيَةٌ 23

    அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  24. 69:24

    كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ 24

    "சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்).

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  25. 69:25

    وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَـٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَـٰبِيَهْ 25

    ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  26. 69:26

    وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ 26

    "அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  27. 69:27

    يَـٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ 27

    "(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  28. 69:28

    مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ 28

    "என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  29. 69:29

    هَلَكَ عَنِّى سُلْطَـٰنِيَهْ 29

    "என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்).

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  30. 69:30

    خُذُوهُ فَغُلُّوهُ 30

    "(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்."

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  31. 69:31

    ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ 31

    "பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  32. 69:32

    ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُ 32

    "பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்).

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  33. 69:33

    إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ 33

    "நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்."

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  34. 69:34

    وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ 34

    "அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை."

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  35. 69:35

    فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَـٰهُنَا حَمِيمٌ 35

    "எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை."

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  36. 69:36

    وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ 36

    "சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  37. 69:37

    لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَـٰطِـُٔونَ 37

    "குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்."

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  38. 69:38

    فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ 38

    ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  39. 69:39

    وَمَا لَا تُبْصِرُونَ 39

    நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  40. 69:40

    إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ 40

    நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  41. 69:41

    وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ 41

    இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  42. 69:42

    وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ 42

    (இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  43. 69:43

    تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ 43

    அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  44. 69:44

    وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ 44

    அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  45. 69:45

    لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ 45

    அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  46. 69:46

    ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ 46

    பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  47. 69:47

    فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَـٰجِزِينَ 47

    அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  48. 69:48

    وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ 48

    ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  49. 69:49

    وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ 49

    ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  50. 69:50

    وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَـٰفِرِينَ 50

    அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  51. 69:51

    وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ 51

    மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

  52. 69:52

    فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ 52

    ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.

    Translation voiceBeta

    AI voice reading the Tamil translation

You may also like

Surahs often read alongside this one.

Android app coming soon to Google Play — download it now.

Get the APK