Surah 80
عبس
'Abasa — Tamil Translation
He Frowned
Read Surah 'Abasa (عبس) in Tamil — chapter 80 of the Quran, all 42 verses in Arabic with Tamil translation by Jan Trust Foundation, verse by verse. Revealed in Makkah, with free MP3 recitation from 12 reciters.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
80:1عَبَسَ وَتَوَلَّىٰٓ 1
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:2
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ 2
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:3
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ 3
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:4
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ 4
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:5
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ 5
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:6
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ 6
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:7
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ 7
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:8
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ 8
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:9
وَهُوَ يَخْشَىٰ 9
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:10
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ 10
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:11
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ 11
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:12
فَمَن شَآءَ ذَكَرَهُۥ 12
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:13
فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ 13
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:14
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ 14
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:15
بِأَيْدِى سَفَرَةٍ 15
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:16
كِرَامٍۭ بَرَرَةٍ 16
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:17
قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ 17
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:18
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ 18
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:19
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ 19
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:20
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ 20
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:21
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ 21
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:22
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ 22
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:23
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ 23
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:24
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ 24
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:25
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا 25
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:26
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا 26
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:27
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا 27
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:28
وَعِنَبًا وَقَضْبًا 28
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:29
وَزَيْتُونًا وَنَخْلًا 29
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:30
وَحَدَآئِقَ غُلْبًا 30
அடர்ந்த தோட்டங்களையும்,
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:31
وَفَـٰكِهَةً وَأَبًّا 31
பழங்களையும், தீவனங்களையும்-
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:32
مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ 32
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:33
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ 33
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:34
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ 34
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:35
وَأُمِّهِۦ وَأَبِيهِ 35
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:36
وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ 36
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:37
لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ 37
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:38
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ 38
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:39
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ 39
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:40
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ 40
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:41
تَرْهَقُهَا قَتَرَةٌ 41
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
- 80:42
أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ 42
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.
Translation voiceBeta
AI voice reading the Tamil translation
You may also like
Surahs often read alongside this one.
